ரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதி மூடல்கள் காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (16) அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர்களுக்கு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, டித்வா சூறாவளி காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் பணிக்கு வர முடியாத அல்லது வீதி மூடல்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக பணிக்கு வர முடியாத அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *