கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் இன்று (17) மாலை 4:00 மணி முதல் 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் தொடர்பான குழாய்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று (17) மாலை 4:00 மணி முதல் நாளை (18) காலை 7:00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *