பதுளையில் தீவிர மீட்பு பணியில் இறங்கியுள்ள இந்திய படையினர்!

இந்தியாவிலிருந்து மீட்பு பணிகளுக்காக இலங்கையை வந்தடைந்த குழுவினரின் ஒரு பகுதியினர் இன்று (03.12.2025) பதுளையில் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

“டித்வா” புயல் காரணமாக நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகள் தொடர் மண்சரிவுகள் பதிவாகியிருந்தன. 

இவ்வாறு ஏற்பட்ட தொடர் மண்சரிவுகளால் பலரும் உயிரிழிந்த நிலையில், பலர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் அறியக் கிடைக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில், இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறிந்து, இந்தியா பல உதவிகளை செய்து வருகின்ற நிலையில் இந்திய விசேட மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, இன்று (03.12.2025) பதுளையில் மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *