Category: Uncategorized

  • தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

    2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

    மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Related

  • ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

    இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன.

    எனினும், மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதற்கு அமைவாக ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா குறிப்பிட்டுள்ளார்.

    மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

    எனினும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு நிலைமை காரணமாக கல்வி அமைச்சு பாடசாலைகள் திறப்பதை ஒத்திவைத்தது.

    அதன்படி, இன்று தொடங்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 22 வரை தொடரும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை கிறிஸ்துமஸ் விடுமுறைகள் இருக்கும்.

    மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்திற்காக டிசம்பர் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு டிசம்பர் 31 வரை தொடரும்.

    அதன் பின்னர் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் முடிவடையும்.

    இதற்கிடையில், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது.

  • ரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

    வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதி மூடல்கள் காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (16) அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர்களுக்கு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    அதன்படி, டித்வா சூறாவளி காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் பணிக்கு வர முடியாத அல்லது வீதி மூடல்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக பணிக்கு வர முடியாத அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

  • அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை – ஆதாரத்தை காட்டுமாறு சவால் விடுக்கும் அமைச்சர்

    இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு பாரிய அளவில் புயல் தாக்கம் ஏற்படும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனை அரசாங்கம் கவனத்திற்கு கொள்ளவில்லை எனவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது.

    இந்த அனர்த்தம் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஏதேனும் ஓர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் முழுவதும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட காலநிலை குறித்த அறிக்கைகள் தம்மிடம் இருப்பதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப்பூர்வமாக இவ்வாறான அறிக்கை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வாறான ஒரு ஒரு முன்எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தால் அது குறித்து அனர்த்த முகாமைத்துவ மையம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    ஆகவே நவம்பர் 12 ஆம் திகதி அறிவுறுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். 

  • யாழ் பல்கலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

    பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில், டிசம்பர் பத்தாம் திகதி வரை விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் இந்த கைது இடம்பெற்றது.

    இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

    விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

    விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் டிசம்பர் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

  • வட மாகாணத்தின் பல வீதிகள் வழமைக்கு

    வடக்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட  7 பிரதான வீதிகள் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன

    குறித்த விடயத்தை வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார்.

    அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்படுகின்றது.

    முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

    வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் – செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

    மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

    கட்டாடுவயல் – இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மகிழங்குளம் – பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது.

    போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு

    மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் நேற்று (3) திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

  • இலங்கைக்கு கைகொடுக்கும் பாகிஸ்தான்! – கடல் மார்க்கமாக அவசர நிவாரணப் பொருட்கள்!

    சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். 

    “எமது இலங்கை சகோதர சகோதரிகளை ஆதரிப்பதற்காக அவசரமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை நாம் உடனடியாக அனுப்பி வைக்கிறோம். இந்தச் சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும்போது, எங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்,” என அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    நேற்று மாலை (02) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை அடுத்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நிவாரண உதவியை அறிவித்துள்ளார். 

    இதற்கிடையில், அழிவுகரமான ‘டிட்வா’ (Ditwah) புயலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிவாரண முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், 200 டன் மனிதாபிமான உதவிகளைப் பாகிஸ்தான் கடல் மார்க்கமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகப் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

  • திட்வா புயலால் 275,000 குழந்தைகள் பாதிப்பு

    “திட்வா” (Ditwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய இலங்கைக்கான பிரதிநிதி (Emma Brigham) தெரிவித்துள்ளார்.

    யூனிசெஃப் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டின் போதே இந்தக் தரவுகள் வெளியாகியுள்ளன.

    இருப்பினும், பல பகுதிகளில் இன்னும் சாலை மற்றும் தகவல் தொடர்பு தடைகள் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று (Emma Brigham) குறிப்பிட்டுள்ளார்.

  • ஒரு மாத சம்பளத்தை வீடு கட்ட கொடுக்கும் சாணக்கியன் எம்.பி

    வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன், தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் நாட்டைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கண்டியில் நேற்று (03.12.2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

    அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டை மீள கட்டியெழுக்க திறைசேரி நிதி மட்டும் போதாது என ஜனாதிபதி கூறினார்.

  • ஜனாதிபதி, அமைச்சர்களை குறிவைத்து அவதூறான பிரசாரம்

    ஜனாதிபதி மற்றும் பல அரசாங்க அமைச்சர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் அவதூறான பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை அமைச்சர் சுனில் வட்டகல காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

     ஜனாதிபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசாங்க பிரமுகர்களுக்கு எதிராக “மிகவும் தீங்கிழைக்கும் தாக்குதல்கள்” இணையவழியில் பரப்பப்படுவதாக தெரிவித்து, காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டார்.

    வெளிநாடுகளில் உள்ளவர்களால் அவதூறு பிரசாரம்

     இந்த பிரசாரங்களில் பல வெளிநாடுகளில் உள்ள நபர்களிடமிருந்து உருவாகின்றன என்றும், அத்தகைய உள்ளடக்கத்தை தொடர்ந்து பரப்புவது பொது பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வரும் என்றும் துணை அமைச்சர் எச்சரித்தார்.

    “இது இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்தால், ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுகளும் அவசரகால விதிமுறைகளும் இந்த சூழ்நிலைக்குள் தெளிவாக உள்ளடக்குகின்றன,” என்று அவர் கூறினார். “எந்தவொரு நபரும் தவறான தகவல்களைப் பரப்பவோ, உண்மைகளைத் திரிக்கவோ அல்லது இணையவழி தளங்கள் அல்லது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபடவோ அனுமதிக்கப்படவில்லை.”

    ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகள் வரை சிறை

     இவ்வாறான மீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், சில குற்றங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.