
சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
“எமது இலங்கை சகோதர சகோதரிகளை ஆதரிப்பதற்காக அவசரமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை நாம் உடனடியாக அனுப்பி வைக்கிறோம். இந்தச் சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும்போது, எங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்,” என அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை (02) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை அடுத்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், அழிவுகரமான ‘டிட்வா’ (Ditwah) புயலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிவாரண முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், 200 டன் மனிதாபிமான உதவிகளைப் பாகிஸ்தான் கடல் மார்க்கமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகப் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
Leave a Reply